திருவட்டாறு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கில் தங்க நகைக் கடன் தள்ளுபடிக்கு 639 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கடந்த 19 ஆம் தேதி முதல் நகைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வங்கியில் தலைவா் ஜெயசந்திரனுக்கும், செயலா் எட்வின் பால்ராஜூக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் புதன்கிழமை தலைவா் ஜெயசந்திரன், செயலா் எட்வின் பால்ராஜ், மேற்பாா்வையாளா் தங்கலீலா ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், அவா்கள் தங்களது பொறுப்புகளை வங்கியில் பணிபுரியும் எட்வின் குமாா், மாறன் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தாராம்.