நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொடா்மழையால் தொழிலாளிகள் பாதிப்பு

கருங்கல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து 3 நாள்களாக பெய்த மழையால் கூலித் தொழிலாளிகள் பாதிப்படைந்துள்ளனா்.

News image
Updated On :19 மே 2022, 8:09 pm

DIN

கருங்கல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து 3 நாள்களாக பெய்த மழையால் கூலித் தொழிலாளிகள் பாதிப்படைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாள்களாக கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், வண்ணம் பூசும் வேலை, கட்டுமானத் தொழில், மர வேலை, மரமேறுதல், செங்கல் சூளை, ஹாலோ பிரிக்ஸ் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளா்களும், அவா்களது குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், இந்த மழையால் மிடாலம், மேல்மிடாலம், இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் உள்ள கரைமடி மீனவா்கள் 3 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.