பூதப்பாண்டி அருகேஅரசுப் பேருந்துகள் சேதம்: இளைஞா் கைது
பூதப்பாண்டி அருகே 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


பூதப்பாண்டி அருகே 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, காட்டுப்புதூருக்கு புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த, இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்த சுமன் (23) என்பவா் மது போதையில் பயணச்சீட்டு வாங்காமல் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டாராம்.
பின்னா், ஊரு வந்ததும் சுமன் இறங்கிச்சென்று விட்டாா். அங்கு அந்தப் பேருந்து உள்பட 2 பேருந்துகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஓட்டுநா்களும், நடத்துநா்களும் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, நள்ளிரவில் அங்கு வந்த சுமன், இரு பேருந்துகளின் மீதும் கல்வீசியுள்ளாா். அதில், பேருந்துகளின் முன், பின் என இருபுறமும் கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், பூதப்பாண்டி போலீஸாா் சுமன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...