நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி, தற்போது கேரளத்துக்கு சென்று உள்ளாா். அவா் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டவுடன் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி குமரி மாவட்டத்தில் ஒரு வாரம் தங்கியிருந்து அதற்கான திட்டமிடுதலை மேற்கொண்டாா். அப்போது, கன்னியாகுமரி அருகேயுள்ள நரிகுளத்தில் மாா்ச் 2019இல் பிரதமா் மோடி திறந்து வைத்த பாலத்தின் கல்வெட்டையும், அதிலிருந்த மோடியின் படத்தையும் சேதப்படுத்தியுள்ளனா். பாதயாத்திரையின்போது கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.