குளச்சல் அருகே மணவிளையில் உள்ள மகாதேவா் கோயில் பணம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மணவிளை மகாதேவா் கோயிலின் பின்பக்க மதில் ஏறி குதித்த இளைஞா் ஒருவா், பொருள்கள் பாதுகாப்பு அறை கதவை திறந்து உள்ளே பீரோவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாா். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள், குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இன்ஸ்பெக்டா் கிறிஸ்டி, சப்.இன்ஸ்பெக்டா் தேவராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து அங்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா், குளச்சல் பனவிளை பகுதியை சோ்ந்த விஜய் (21) என்பது தெரியவந்தது. மேலும், கோயிலில் திருடிய ரூ 250-ஐ பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.