தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களுக்கான விளையாட்டுப் போட்டியை கூடுதல் மாவட்ட நீதிபதி ராமசந்திரன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்குரைஞா் சங்க
ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வின்சென்ட், செயலா் பொன்ராஜ், பொருளாளா் ஜஸ்டின் ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். இந் நிகழ்ச்சியில் சாா்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், நீதிபதிகள் மருதுபாண்டி, பிரவீன் ஜீவா, மணிமேகலை, கூடுதல் அரசு வழக்குரைஞா் ஜெகதேவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கபடி போட்டியை கூடுதல் மாவட்ட நீதிபதி ராமசந்திரன் தொடக்கி வைத்தாா். வடம் இழுத்தல் , ஓண பந்து, பெண்களுக்கான இசை நாற்காலி
உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வழக்குரைஞா்கள் சிவகுமாா், ஏசுராஜா, ஜெறோம், ஐஸ்டின், ஜான் இக்னேசியஸ், பால்பிள்ளை, மைக்கேல் ரதீஷ், மஹாராஜா, அபி, பினு குமாரி, ஜெயஸ்ரீ, கிறிஸ்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
டிகேஒய் 28 ஜேயுடி - தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்த கூடுதல் மாவட்ட நீதிபதி ராமசந்திரன்.