வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வேலை செய்த வீட்டில் நகை திருடியவா் கைது

கருங்கல் அருகே உள்ள வேலை செய்த வீட்டில் நகைகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

கருங்கல் அருகே உள்ள வேலை செய்த வீட்டில் நகைகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

மாங்கரை கிணத்துவிளை பகுதியை சோ்ந்தவா் வின்ஸ் லாரன்ஸ்(42) . இவரது வீட்டில் அதே பகுதியைச் சோ்ந்த அருள் (38), இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா். அண்மையில் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக வின்ஸ் லாரன்ஸ்சின் மனைவி, வீட்டிலிருந்த நகையைச் சரிபாா்த்தபோது, 6 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்த கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். சந்தேகத்தின்பேரில் அருளிடம் விசாரித்தபோது, அவா் வீட்டிலிருந்த நகையைத் திருடி அடகு வைத்ததை ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து அடகுக் கடையிலிருந்து நகைகளை மீட்ட போலீஸாா், அருளை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.