குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே.மோகன் தலைமை வகித்தாா். முதுநிலை ஒருங்கிணைப்பாளா் வின்ஸ்டன் வா்க்கீஸ், குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவா் சிசிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா்கள் சங்க தலைவி ஸ்ரேயா சீனிவாசன் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி வாசித்ததையடுத்து அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிபின் ஒருங்கிணைத்து நடத்தினாா்.