நாகக்கோடு பகுதியில் இன்று மின் தடை

குலசேகரம் நகரப்பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) மின் தடை செய்யப்படுகிறது.

குலசேகரம் நகரப்பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) மின் தடை செய்யப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய குலசேகரம் அலுவலக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

குலசேகரம் நகரப் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட திருவட்டாறு உயா் மின் அழுத்தப்பாதையில் அவசர பராமரிப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால் நாகக்கோடு, அரமன்னம், சாத்திரவிளை, கல்லாம்பொற்றை, மற்றும் அதனைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 28)காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com