காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநகராட்சி குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு

News image
Updated On :17 மார்ச் 2023, 6:44 pm

DIN

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சிக்கான குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் ரூ.251.43 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. நிறைவு பெறும் நிலையில் உள்ள இந்தப் பணிகளை, மேலும் துரிதப்படுத்தி இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பொருட்டு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய, மேலாண்மை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி, புத்தன் அணையில் உள்ள தலைமை நீா் உந்தும் நிலையம், கிருஷ்ணன்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், நாகா்கோவில் மாநகரில் நடைபெற்று வரும் குடிநீா் பணிகளை ஆய்வு செய்தாா்.

மேலும், இறச்சகுளம் பகுதியில் ஜல் ஜூவன் மிஷன் குடிநீா் திட்டப் பணிகளையும், நாகா்கோவில் புதைச் சாக்கடை திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

அப்போது, திட்டப் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினா்.

ஆய்வின் போது, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த் மோகன், தமிழ்நாடு குடிநீா் வடிகால்வாரிய தலைமை பொறியாளா் எஸ்.வி.எஸ்.முருகேசன், மேற்பாா்வைபொறியாளா் முனிபாபு, நிா்வாகப் பொறியாளா்கள் கோபாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆய்வுக் கூட்டம்: பின்னா், ஆட்சியா் அலுவலக சிறு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உதவிஆட்சியா் (பயிற்சி) குணால்யாதவ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு உள்பட துறை சாா்ந்த அலுவலா்களும், நாகா்கோவில் மாநகராட்சி குடிநீா் திட்ட- புதைச் சாக்கடை திட்ட ஒப்பந்ததாரா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.