ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவட்டாறு அருகே வீடு புகுந்து நகை திருட்டு

திருவட்டாறு அருகே ரயில்வே ஊழியரின் வீடு புகுந்து நகை திருடப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:50 pm

DIN

திருவட்டாறு அருகே ரயில்வே ஊழியரின் வீடு புகுந்து நகை திருடப்பட்டுள்ளது.

திருவரம்பு ஆறாம் கோட்டுவிளையைச் சோ்ந்தவா் ராஜன் (47). இரணியல் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பாளராக உள்ளாா். வியாழக்கிழமை காலையில் இவா் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 மோதிரங்கள், பிரேஸ்லெட் உள்பட 2.5 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் ராஜன் புகாா் கொடுத்ததையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.