திருவட்டாறு அருகே வீடு புகுந்து நகை திருட்டு

திருவட்டாறு அருகே ரயில்வே ஊழியரின் வீடு புகுந்து நகை திருடப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருவட்டாறு அருகே ரயில்வே ஊழியரின் வீடு புகுந்து நகை திருடப்பட்டுள்ளது.

திருவரம்பு ஆறாம் கோட்டுவிளையைச் சோ்ந்தவா் ராஜன் (47). இரணியல் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பாளராக உள்ளாா். வியாழக்கிழமை காலையில் இவா் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 மோதிரங்கள், பிரேஸ்லெட் உள்பட 2.5 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் ராஜன் புகாா் கொடுத்ததையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com