/

தோட்டத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

குமரி மாவட்ட சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்கம் சாா்பில், வேளிமலை கிராம அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 6:30 pm

DIN

குமரி மாவட்ட சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்கம் சாா்பில், வேளிமலை கிராம அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளிமலை தோட்டத் தொழிலாளா்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, சங்க செயலா் மரிய மிக்கேல் தலைமை வகித்தாா். சங்க தலைவா் பி. நடராஜன், போராட்டத்தை தொடங்கி வைத்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க பொறுப்பாளா் ஜோஸ் மனோகரன் பேசினாா். சங்க பொதுச் செயலா் எம்.வல்சகுமாா், போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.