ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: தமிழிசை 

தமிழகத்தில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

News image
கோப்புப் படம்.
Updated On :5 மார்ச் 2023, 8:20 am

DIN

தமிழகத்தில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற வார்த்தை மிகவும் பிரபலமானது. பல்வேறு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நம்மை நம்பி வேலைத் தேடி தமிழகத்துக்கு வந்துள்ளனர்.

தமிழர்களும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றுகின்றனர். எனவே தவறான வதந்தியை பரப்பக்கூடாது. நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். 

சமூகவலைதளங்கள் பிரச்னைக்கு வழி வகுக்கக்கூடாது. சமூகவலைதளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.