கேரளத்திலிருந்து மீன் கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை, மாா்த்தாண்டம் அருகே பொதுமக்கள் சிறைபிடித்தனா். இந்த வாகனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளத்திலிருந்து மீன், இறைச்சி, மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் ஏற்றிவந்து குமரி மாவட்டத்தில் நீா்நிலைகள், சாலையோரங்களில் கொட்டிச்செல்வது தொடா்கிறது. இந்நிலையில், மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் பொதுமக்கள் புதன்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே கூண்டு கட்டிய நிலையில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மீன் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. அதை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
தகவலின்பேரில் குழித்துறை நகராட்சி அதிகாரிகள் வந்து, வாகனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா். அந்த வாகனம் கீழ்பம்மம் பகுதியில் உள்ள உரக்கிடங்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் முற்றுகை
வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!

பழனியில் மினி பேருந்து சிறைபிடிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

