பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தற்கொலை

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 3:25 am IST

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் குட்டப்பன் மகன் ஜோஸ் (41). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தாா். புதன்கிழமை இரவு வீட்டில் படுக்கச் சென்றாா். வியாழக்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. உறவினா்கள் வந்து பாா்த்த போது அவா் விஷம் குடித்து இறந்து கிடந்தாா்.

இது குறித்து களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சடலத்தை போலீஸாா் மீட்டு உடல் கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.