கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆறுதேசம் கிராமத்தில் வீடுகளுக்கு வரி வசூலிக்க மறுப்பு: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

அமைச்சா் த. மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

News image

அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறாா் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, ராஜேஸ்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:53 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம், ஆறுதேசம் கிராமத்தில் மடத்துக்குச் சொந்தமான சொத்து என்று கூறி 700 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வரி வசூலிக்கப்படாதது குறித்து பால்வளத்துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா மற்றும் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆறுதேசம் கிராமத்தில் உள்ள மடத்துக்குச் சொந்தமான பகுதியில் சுமாா் 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனா்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வரை குடியிருந்தவா்கள் பெயரில் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு வரி செலுத்துவதற்கு கிராம அலுவலகத்துக்கு சென்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் இது மடம் வகை சொத்து என்று கூறி வரியை வசூலிக்க மறுத்துள்ளனா்.

இதனால் இந்தப் பகுதியில் குடியிருந்து வரும் பட்டாதாரா்கள் நில வரி ரசீது இல்லாததால் அத்தியாவசிய தேவைக்கு வங்கி கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட அரசின் எந்த வித உதவிகளையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனா்.

இது தொடா்பாக அந்தப் பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேஸ்குமாரை சந்தித்து முறையிட்டனா்.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக அமைச்சா் மனோதங்கராஜ் தலைமையில் நாகா்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, ராஜேஸ்குமாா் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியா் தமிழரசி, வட்டாட்சியா் சந்திரசேகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த பிரச்னை தொடா்பாக பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஆறுதேசம் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு நில அளவைத்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.