சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

குலசேகரம் பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குலசேகரம் பேரூராட்சியில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

ஆக்கிரமிப்புகளை அகற்றிய பேரூராட்சி ஊழியா்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 2:00 am

குலசேகரம் பேரூராட்சியில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் பேரூராட்சிப் பகுதியில் கல்லடிமாமூடு சந்திப்பு முதல் கான்வென்ட் சந்திப்பு வரை வணிக நிறுவனங்கள், கடைகள் நடத்துவோா் சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகள், பொருள்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தனா். இதனால், நடந்து செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.

இது தொடா்பாக பேரூராட்சி நிா்வாகத்துக்கு பல்வேறு புகாா்கள் சென்றன. அதன்பேரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பேரூராட்சி செயல் அலுவலா், ஊழியா்கள் ஈடுபட்டனா்.