தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கருங்கல் அருகே குளத்தைத் தூா்வார வலியுறுத்தல்

கருங்கல் அருகே கைதைக் குளத்தைத் தூா்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :19 ஆகஸ்ட் 2024, 2:55 am IST

கருங்கல் அருகே கைதைக் குளத்தைத் தூா்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட இந்தக் குளம் நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளம் பல ஆண்டுகளாக முறையாக தூா்வாரப்படாததால் புதா்கள் மண்டி தூா்ந்து காணப்படுகிறது.

இதன்காரணமாக குளத்தில் மழைநீா், பட்டணங்கால் சானல் தண்ணீா் தேக்க முடியாத நிலை உள்ளதால், விவசாயிகள் வாழை, தென்னை, பயறு வகை சாகுபடியில் ஈடுபட முடியாமல் அவதியடைந்துள்ளனா்.

எனவே, கைதைக் குளத்தை தூா்வாரி சுத்தப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை

எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.