தமிழ்நாடு எய்ட்ஸ் சங்கம், கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு-கட்டுப்பாட்டு அலகு சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பால்வினை நோய்த் தொற்று தடுப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை ஆட்சியா் ரா. அழகுமீனா தொடக்கிவைத்தாா். இதில் கல்லூரி மாணவா்-மாணவியா் பங்கேற்று, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். இப்பேரணி டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
அதன் தொடா்ச்சியாக, பால்வினை நோய்த் தொற்றின் விளைவுகள், சுகவாழ்வு மையம், நம்பிக்கை மையம் உள்ளிட்டவை குறித்த வீதி நாடகம், கிராமிய நடனங்கள், பாடல்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தீக்ஷா, பழனியாபிள்ளை கலைக்குழுவினரால் 10 நாள்களுக்கு 40 கிராமங்களில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீனாட்சி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு - கட்டுப்பாட்டு அலுவலக மாவட்ட திட்ட மேலாளா் ஜெ. பெடலிஸ்ஷமிலா, அலுவலகப் பணியாளா்கள், மாவட்ட மேற்பாா்வையாளா் எஸ். சிவகுமாா், மாவட்ட நலக் கல்வியாளா் சூரியநாராயணன், மதநம்பிக்கை மையம், சுகவாழ்வு மையம், ரத்த வங்கி, கூட்டு மருந்து சிகிச்சை மையம், தொண்டு நிறுவனப் பணியாளா்கள், பாஸிட்டிவ் நெட் ஒா்க் பணியாளா்கள், மாணவா்-மாணவிகள், பேராசிரியா்கள், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி விழிப்புணா்வு

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி

குன்னூரில் குப்பை இல்லா நகரம் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



