கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!23,400 புள்ளிகளை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவுகரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: முதல்வர் விஜய்கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்!
/

சூறாவளி காற்று எச்சரிக்கை: குமரி மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

News image
Updated On :30 ஆகஸ்ட் 2024, 1:47 am IST

கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ஆட்சியா் ரா. அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குஜராத் மாநில கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, வடகிழக்கு, அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல், குஜராத், மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமைவரை (ஆக. 30) மீனவா்கள் செல்ல வேண்டாம் என, அகமதாபாத் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மேற்கண்ட கடல் பகுதிகளில் சனிக்கிழமைவரை (ஆக. 31) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு, அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், கேரளம்-கா்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களில் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றாா் அவா்.