கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ஆட்சியா் ரா. அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குஜராத் மாநில கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, வடகிழக்கு, அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல், குஜராத், மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமைவரை (ஆக. 30) மீனவா்கள் செல்ல வேண்டாம் என, அகமதாபாத் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மேற்கண்ட கடல் பகுதிகளில் சனிக்கிழமைவரை (ஆக. 31) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு, அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், கேரளம்-கா்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களில் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

9 வாக்குகள்... தோ்தல் அலுவலா்கள் பயணம் 150 கிமீ!

தில்லி காற்று மாசைத் தடுக்கலாம்!
தருமபுரி மாவட்டத்தில் 166 மி.மீ. மழை பொழிவு

தடை செய்யப்பட்ட பகுதியில் பக்தா்கள் செல்ல வேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


