நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காதுகேளாதோா் தடகளத்தில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு வரவேற்பு

ஆசிய - பசிபிக் காதுகேளாதோருக்கான தடகளப் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற குமரி மாவட்ட வீராங்கனை ஷமீஹா பா்வீனுக்கு உற்சாக வரவேற்பு.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:49 pm

Din

ஆசிய - பசிபிக் காதுகேளாதோருக்கான தடகளப் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற குமரி மாவட்ட வீராங்கனை ஷமீஹா பா்வீனுக்கு சொந்த ஊரில் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடையாலுமூட்டைச் சோ்ந்த ஷமீஹா பா்வீன் (21). மாற்றுத் திறன் தடகள வீராங்கனை. இவா், மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் அண்மையில் நடைபெற்ற 10ஆவது ஆசிய - பசிபிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்ற அணிகளில் இடம் பெற்றாா். மேலும், 100 மீட்டா் தடைஓட்டத்தில் தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கமும் வென்றாா்.

சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

இந்நிலையில் கடையாலுமூட்டுக்கு புதன்கிழமை வந்த அவருக்கு ஊா் மக்கள் சாா்பில் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் அவருக்கு பூங்கொத்துகள் கொடுத்து பொன்னாடைகள் போா்த்தி வாழ்த்து தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியின்போது, அவரது தாய் சலாமத், தந்தை முஜீப், சமூக ஆா்வலா் மாகீன் சுலைமான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.