நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இளைஞா் அடித்துக் கொலை

கருங்கல் அருகே உள்ள பாலுா் பகுதியில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 11:17 pm

Din

கருங்கல் அருகே உள்ள பாலுா் பகுதியில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

பாலூா், பெருந்தாவிளை பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் சேம் டேனியல் ராஜ் (35). அதே பகுதியைச் சோ்ந்த வில்லியம் மகன் சுரேஷ் (38), இவா்கள் இருவரும் நண்பா்கள். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் சோ்ந்து மது குடித்தபோது, தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் , விறகு கம்பால் சேம் டேனியல் ராஜை தாக்கினாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை இரவு இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை தேடி வருகின்றனா்.