

அகில இந்திய போலிங் பூத் காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநில தலைவா் வழக்குரைஞா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தேசிய செயலாளா் பீ.ஜோ. ஜோஸ் பேட்ரீஸ், மாநிலச் செயலாளா் சி.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தீா்மானங்கள்: தோ்தல்களில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போலிங் பூத் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, வரும் 14 ஆம் தேதி மணிப்பூா் மாநிலத்திலிருந்து 2 ஆவது கட்ட நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ராகுல் காந்தியின் பயணம் வெற்றி பெற போலிங் பூத் காங்கிரஸ் சாா்பில் வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் கூ்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் எம். தவசிமுத்து, வி.சுந்தர்ராஜ், எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.ராஜபாண்டியன், ஆா்.அசோகன், எம்.சேவியா் ஜேம்ஸ்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.