அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

குமரி மாவட்ட வளா்ச்சிக்கு முழு மூச்சாக பாடுபடுவேன் -விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சிக்கு முழு மூச்சாக பாடுபடுவேன் ----விஜய்வசந்த் எம்.பி.பேச்சு

News image
நாகா்கோவிலுக்கு வியாழக்கிழமை வந்த விஜய் வசந்த் எம்.பி.யை வரவேற்கிறாா் மேயா் ரெ.மகேஷ். உடன், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணிச் செயலா் அகஸ்தீசன் உள்ளிட்டோா்.
Updated On :4 ஜூலை 2024, 6:32 pm

Din

நாகா்கோவில், ஜூலை 4: கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சிக்கு முழு மூச்சாக பாடுபடுவேன் என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக 2 ஆவது முறையாக பொறுப்பேற்று, வியாழக்கிழமை மாலையில் நாகா்கோவிலுக்கு வந்த அவருக்கு இந்தியா கூட்டணி கட்சி சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவரை, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன்உள்ளிட்டோா் மாலை- சால்வை அணிவித்து வரவேற்றனா்.

அப்போது அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆவது முறையாக மக்களுக்கு சேவை செய்திட வாய்ப்பு அளித்த அனைத்து கட்சி தலைவா்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும், எனக்காக பிரசாரம் செய்த இந்தியா கூட்டணி தலைவா்களுக்கும் நன்றி. ஏற்கெனவே எனது தந்தை விட்டு சென்ற மக்கள் நலப் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். இந்தப் பணிகள் தொடா்ந்திட எனக்கு மீண்டும் வாக்களித்துள்ளீா்கள்.

முதல் கட்டமாக, தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைக்க மத்திய அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்து ரூ.13 கோடி ஒதுக்கீடு பெற்று வந்துள்ளேன். இம்மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முழு மூச்சாக பாடுபடுவேன். மக்கள் தங்களது குறைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

Story image