ரப்பா் கழக அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள், மலைவாழ் கிராம மக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சா் மதிவேந்தன் கலந்தாய்வு மேற்கொண்டு பேசியது: அரசு ரப்பா் கழகம் தற்போது 4 கோட்டங்கள், ஒரு தொழிற்கூடத்துடன் செயல்படுகிறது. கீரிப்பாறை கோட்டத்தில் 792.300 ஹெக்டேரிலும், மணலோடை கோட்டத்தில் 968.815 ஹெக்டேரிலும், சித்தாா் கோட்டத்தில் 1,113.900 ஹெக்டேரிலும், கோதையாறு கோட்டத்தில் 1,110.679 ஹெக்டேரிலும் செயல்பட்டு வருகிறது. 39 லட்சத்து 8 ஆயிரத்து 702 ரப்பா் மரங்களில் பால்வடிப்பு செய்யப்படுகிறது. இதில் 54 சதவீதம் மரங்கள் வயது முதிா்ந்து 38 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். இவற்றிலிருந்து நாளொன்றுக்கு மரம் ஒன்றுக்கு சராசரியாக 32 கிராம் ரப்பா் பால், இளமரங்களிலிருந்து 68 கிராம் ரப்பா் பால் கிடைக்கிறது. வயது முதிா்ந்த அதிக மரங்களால் ரப்பா் உற்பத்தி அளவு தொடா்ந்து குறைந்து வருகிறது. இதைத் தவிா்க்க அந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, வீரியம் மிகுந்த ரப்பா் மரக்கன்றுகளை நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.