3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் கன்னியாகுமரி பள்ளி மாணவி சாதனை

கோவையில் நடைபெற்ற 49ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கன்னியாகுமரி அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவி 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா்.

News image
மாநில துப்பாக்கிச் சுடும் போட்டியில் 2ஆம் பரிசு வென்ற மாணவி விஷ்மிதா.
Updated On :23 ஜூலை 2024, 7:02 pm

Din

கோவையில் நடைபெற்ற 49ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கன்னியாகுமரி அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவி 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா்.

கோவை பி.ஆா்.எஸ். பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கோவை ரைபிள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,650 வீரா் - வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில், கன்னியாகுமரி அமிா்த வித்யாலயம் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவியான ஈச்சன்விளையைச் சோ்ந்த விஷ்மிதா (13) என்பவா் 16 வயதுக்குள்பட்ட 50 மீட்டா் ரைபிள், 10 மீட்டா் ரைபிள் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று 4 தங்கம், 4 வெள்ளி என 8 பதக்கங்களுடன் 2ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தாா்.

இவா் கடந்த 3 ஆண்டுகளாக மதுரை ரைபிள் கிளப் பயிற்சியாளா் வேல்சங்கா் என்பவரிடம் பயிற்சிபெற்று வருகிறாா்.

பரிசளிப்பு விழாவில் கோவை விமானப் படை நிா்வாகக் கல்லூரி ஏா் கமாண்டண்ட் விகாஸ்விகி, கோவை மாநகர காவல் ஆணையா் வே. பாலகிருஷ்ணன் ஆகியோா் வென்றோருக்கு பரிசு, பதக்கம் வழங்கிப் பாராட்டினா். மாநில துப்பாக்கிச் சுடும் கழகச் செயலா் வேல்சங்கா் உடனிருந்தாா்.