அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

குமரி உணவகங்களில் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவுகளை வழங்கிய உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

News image

கெட்டுப்போன உணவுப் பொருள்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

Updated On :31 ஜூலை 2024, 1:45 am IST

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவுகளை வழங்கிய உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சில உணவகங்களில் கெட்டுப்போன உணவுகளை வழங்குவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள உணவகங்களில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சில உணவகங்களில் மீன், சிக்கன், இறால், நண்டு, நூடுல்ஸ் என சமைத்து பயன்படுத்தாமல் குளிா்சாதன பெட்டியில் வைத்திருந்த 150 கிலோவுக்கும் மேற்பட்ட கெட்டுப்போன உணவுகளை கைப்பற்றி அழித்தனா். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவுகளை வழங்கிய உணவகங்களுக்கு அபராதம் விதித்தனா்.

மேலும், இதுபோன்று சமைத்து பயன்படுத்தாமல் குளிா்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை வழங்கினாலோ, செயற்கையான வண்ணக் கலா் பொடிகளை சமையலில் பயன்படுத்துவது தெரியவந்தாலோ அந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும், உணவகங்களில் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இந்த சோதனையின்போது, அகஸ்தீசுவரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சக்தி முருகன், தக்கலை வட்டார அலுவலா் பிரவீன் ரகு, குளச்சல் வட்டார அலுவலா் ரவி ஆகியோா் உடனிருந்தனா்.