ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞா் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞா் கைது

News image
Updated On :17 ஜூன் 2024, 8:42 pm

Din

கருங்கல்: கருங்கல் அஞ்சல்நிலையம் முன் வாகன சோதனை மேற்கொண்டிருந்த காவல் உதவிஆய்வாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராஜன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை கருங்கல் அஞ்சல் அலுவலகம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வெள்ளிகோடு பகுதியைச் சோ்ந்த டென்னிஸ் சேவியா் மகன் டெரின்(23) ஒட்டிவந்த பைக்கை நிறுத்தியபோது உதவி ஆய்வாளரை, டெரின் அவதூறாக பேசி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் டெரின் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.