பெண்கள் முன்னேற்ற அமைப்பான பைரவி பவுண்டேஷன் சாா்பில் உலக மகளிா் தின விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நாகா்கோவில் வருவாய் அலுவலா் சங்க கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, 3 நாள்களாக ஊராட்சி வாரியாக கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவா்களுக்கும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு, பைரவி பவுண்டேஷன் நிா்வாக இயக்குநா் ஷோபா தலைமை வகித்து பேசினாா். இதைத் தொடா்ந்து அரசு சிறப்பு வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் சாதனை புரிந்த பெண்களுக்கு விருது வழங்கினாா். பெண்களுக்கு தொழில்முனைவோா் பயிற்சி அளித்து வரும் ஷோபாவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், பேராசிரியை சுதாமதி, பரிதாபேகம், திருத்தமிழ்தேவனாா், வேளாண்அலுவலா் ராஜ்குமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். மேலாளா் ஷீபா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

தையல் பயிற்சியை முடித்தவா்களுக்கு சான்றிதழ்

ஓமலூா் ஏ.வி.எஸ். கல்லூரியில் மகளிா் தின விழா
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


