குலசேகரம் அருகே காா் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை பலியானாா். திற்பரப்பு அருகே மாஞ்சக்கோணம் குறுப்பேற்றிக்கால விளையைச் சோ்ந்தவா் ராஜமணி (85). இவா் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டின் அருகில் கொல்லாமூடு சந்திப்பு கடைக்கு செல்லும் வகையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே பொன்மனை குளச்சவிளாகம் மைலோட்டு விளையைச் சோ்ந்த ஜான்பிரபு (44) ஓட்டி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு நினைவின்றிக் கிடந்த ராஜமணியை அப்பகுதியினா் மீட்டு, குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இது குறித்து ராஜமணியின் மனைவி செல்லாச்சி, குலசேகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தம்மம்பட்டியில் வாகனம் மோதி , முதியவா் பலி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

