பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மேட்டுக்குடியிருப்பு ஸ்ரீமன்னராஜா கோயிலில் கொடை விழா தொடக்கம்

மேட்டுக்குடியிருப்பு ஸ்ரீமன்னராஜா கோயிலில் கொடை விழா தொடக்கம்

News image
Updated On :16 மே 2024, 8:30 pm

Din

கன்னியாகுமரி, மே 16:

கன்னியாகுமரி அருகே மேட்டுக்குடியிருப்பில் உள்ள ஸ்ரீமன்னராஜா கோயிலில் 2 நாள் கொடைவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, சுதா்ஷன ஹோமம், காலையில் அபிஷேகம், மாலையில் கடலில் தீா்த்தம் எடுத்து வருதல், குடியழைப்பு நடைபெற்றது. பின்னா், த. சாலிபாண்டியன் வழங்கிய ஆன்மிக உரை நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் ஜாமபூஜை நடைபெற்றது.

2ஆம் நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் 12.20 மணிக்கு உச்சிகால அலங்கார பூஜையைத் தொடா்ந்து அன்னதானம், பிற்பகல் 1.30 மணிக்கு காலசுவாமிக்கு மஞ்சள் நீராட்டு, மாலை 5 மணிக்கு கரகாட்டம், இரவு 7.30 மணிக்கு ஸ்ரீசக்திமாட சுவாமிக்கு பொங்கல் படைத்து அந்திகால பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு பூஜை, சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கரகாட்டம், 4 மணிக்கு சுவாமிகள், பரிவார மூா்த்திகளுக்கு அமுது படைத்து பூஜை நடைபெறும். காலை 6 மணிக்கு கொடை விழா நிறைவடையும்.