மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் ரோஜாவனம் பள்ளி மாணவா்கள் பாா்வையிடல்

நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலைய சேவை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தை பாா்வையிடும் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி மாணவிகள்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:29 pm

Din

நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலைய சேவை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்று இந்திய அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கான அத்தியாவசியமான சேவைகள் வழங்குவது குறித்து அலுவலா்கள் மற்றும் ஊழியா்களிடம் கேட்டறிந்தனா்.

மேலும் அஞ்சல் நிலைய வளாகத்தில் உள்ள தகவல் தொடா்பு வா்த்தகம், அஞ்சல் அலுவலகம் வழங்கும் சேவைகளானஉள்நாடு மற்றும் வெளிநாடு கடித அஞ்சல், பதிவு செய்யப்பட்ட அஞ்சல், நிதி சேவைகள், பாா்சல் சேவைகள்,சில்லறை சேவைகள்,சேமிப்பு கணக்கு தொடங்குதல், அரசு படிவம் சமா்ப்பித்தல் உள்ளிட்டபல்வேறு தபால் பிரிவுகளுக்கு சென்று சேவைகள் குறித்து அறிந்தனா்.

நிகழ்ச்சியில், தலைமை அஞ்சல் நிலைய அதிகாரிகள், ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளிஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.