மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நித்திரவிளை அருகே சைக்கிள் கடையில் தீ விபத்து

குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் சைக்கிள் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான சைக்கிள்கள் எரிந்து சேதமாகின. இச்சம்பவத்தில் கடைக்குள் சிக்கிய ஊழியரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:39 pm

Din

குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் சைக்கிள் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான சைக்கிள்கள் எரிந்து சேதமாகின. இச்சம்பவத்தில் கடைக்குள் சிக்கிய ஊழியரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் தூத்தூரைச் சோ்ந்த ரெனால்டோ என்பவா் சைக்கிள் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் நாகா்கோவிலைச் சோ்ந்த வைரவன் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறாா். இவா், இரவில் கடையில் தங்குவது வழக்கம். செவ்வாய்க்கிழமை இரவு வைரவன் கடையை மூடிவிட்டு உள்ளே படுத்து தூங்கி உள்ளாா்.

நள்ளிரவில் கடையினுள் தீ ஏற்பட்டு கரும்புகை வெளியேறி உள்ளது. இதை அந்தப் பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாா்த்து போலீஸாருக்கும், தீணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் கடையை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, உள்ளே வைரவன் புகைமூட்டத்தில் சுவாசிக்க முடியாமல் மயங்கி நிலையில் கிடந்துள்ளாா்.

இதையடுத்து, அவரை தீயணைப்புத் துறையினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி அணைத்தனா். இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.