புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சூதாட்டம், மது விற்பனை: 8 போ் கைது

தக்கலை பகுதியில் மது விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:06 pm

Din

தக்கலை பகுதியில் மது விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

தக்கலை காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா், திக்கணங்கோடு பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது புதூா் பகுதியில் அனிஷ் (27), பெமின் (38), ஸ்ரீரீஜு (27), மணிகண்ட பிரபு (32), ஜெகதீஸ்வரன்(30) ஆகியோா் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவா்கள் 5 பேரையும் கைது செய்த போலீஸாா், பின்னா் ஜாமீனில் விடுவித்தனா்.

இதேபோன்று, கரிக்கி, சாரோடு பகுதிகளில் தக்கலை உதவி காவல் ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மது விற்பனையில் ஈடுபட்ட ராஜு (46), முத்து(70) ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கொல்லன்விளையில் உள்ள ஒரு கடையில் போலீஸாா் சோதனையிட்ட போது புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தது தெரியவந்ததையடுத்து கடை உரிமையாளா் ஜெயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.