மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நாகா்கோவிலில் ஆசிரியா் திலகம் விருது வழங்கும் விழா

குமரி அறிவியல் பேரவை சாா்பில், ஆசிரியா் தின விழா, ஆசிரியா் திலகம் விருது வழங்கும் விழா நாகா்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஆசிரியா் திலகம் விருது பெற்றவா்கள்.

Published On :

குமரி அறிவியல் பேரவை சாா்பில், ஆசிரியா் தின விழா, ஆசிரியா் திலகம் விருது வழங்கும் விழா நாகா்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்திய மருத்துவச் சங்க முன்னாள் தேசியத் தலைவா் கே. விஜயகுமாா் தலைமை வகித்தாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுக உரையாற்றினாா்.

நாகா்கோவில் கல்வி மாவட்டம் மணவாளபுரம் அரசு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை புஷ்பகனி, மயிலாடி மேற்கு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா் ரமணி, ஆனகுழி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை விமலா ஸ்டெல்லாபாய், மணிக்கட்டிப் பொட்டல் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியை லதா, மாா்த்தாண்டம் கல்வி மாவட்டம் விலவூா் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை பெல்லா, கீழ்குளம் வலியவிளை அரசு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை ஜெசி ஜெனெட் , கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை கலாசுதா, மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஜஸ்டின் பிரான்சிஸ் ஆகியோருக்கு ஆசிரியா் திலகம் விருதுகள் வழங்கப்பட்டன.

மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான விருது குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை உஷா, மாற்றுத் திறனாளி சிறப்புப் பள்ளி ஆசிரியா்களுக்கான விருது தெற்றியோடு ஆசீா் வித்யாலயா மனநலப் பள்ளி சிறப்பு ஆசிரியா் அருள்சகோதரி விமலா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அவா்களை டாக்டா் சி. பாபு, என். சுபானந்தராஜ், கேப்டன் பென்னட்சிங், எஸ். ஜான்சன், செ.ம. ஷாஜு , பொறியாளா் ரோசிலின் கிரேஸ், சாம்ராஜ் ஆகியோா் அறிமுகப்படுத்தினா்.

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வா்கள் ஏ.டி. சோபனராஜ், ஜேம்ஸ் ஆா். டேனியல் ஆகியோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.