குழித்துறையில் பிரதா்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெறும் திருவோணம் விழாவை, தாரகை கத்பட் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கேரளத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை, ஆவணி மாதம் அத்தம் நட்சத்திர தினம் துவங்கி திருவோணம் தினம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் பிரதா்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓணம் விழா துவக்க நிகழ்ச்சியை தாரகை கத்பட் எம்.எல்.ஏ. ஊஞ்சலில் ஆடி தொடக்கி வைத்தாா்.
குழித்துறை தபால் நிலைய அதிகாரி மொ்சி சீதாராமன், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் விஜூ, விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இவ்விழாவையொட்டி செப்.13-ஆம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், 14-ஆம் தேதி நடனம், 15-ஆம் தேதி திருவோணம் பண்டிகையையொட்டி மகாபலி நகா்வலம், அன்றைய தினம் மாலை இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது.
தொடர்புடையது

இரணியல் பேரூராட்சியில் குளச்சல் எம்எல்ஏ ஆய்வு

ஆளூா் குடிநீா் பிரச்சனை: தாரகை கத்பட் எம்.எல்.ஏ. ஆய்வு

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த குளச்சல் எம்எல்ஏ

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



