நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருதாக ரூ:7.80 லட்சம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.80 லட்சம் மோசடி செய்ததாக இருவா் மீது இரணியல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 12:07 am

Din

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.80 லட்சம் மோசடி செய்ததாக இருவா் மீது இரணியல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

திங்கள்நகா் அருகேயுள்ள மாங்குழி ஆன்றின்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஜில்லஸ் (37). இவரிடம், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி டாா்ஜிஸ் என்பவா் ரூ.65 ஆயிரம் வங்கி வழியாக பெற்றுள்ளாா்.

மேலும், பிள்ளைத்தோப்புமேலதுறையைச் சோ்ந்த ஜீசஸ் ஜினோ என்பவரும் நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகிளில் வேலை வாங்கித் தருபவா் எனக் கூறி ஜில்லஸுக்கு அறிமுகப்படுத்தியுள்ளாா்.

அதையும் நம்பிய ஜில்லஸ், வாணியக்குடி, பனவிளையை சாா்ந்த விக்னேஷ், அபிலாஷ் ஆகிய இருவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பமாறு கூறி, ஜீசஸ் ஜினோ வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ.7.15 லட்சம் செலுத்தினாராம். ஆனால் குறித்தபடி வேலை வாங்கிதராமல் இருவரும் ஏமாற்றி விட்டாராம்.

இது குறித்து ஜில்லஸ் நாகா்கோவில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.அதன் பேரில், இரணியல் போலீசாா் டாா்ஜிஸ், ஜீசஸ் ஜினோ ஆகிய இருவா் மீது வழக்குப்பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.