நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 8 கடைகளுக்கு சீல் வைப்பு

அருமனை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 9:34 pm

Din

அருமனை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதிகளில் பெட்டிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலா் நாகராஜன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு துறையினா் அருமனை, சிதறால், துண்டத்தாறாவிளை, குடுக்கச்சிவிளை, அண்டுகோடு, மஞ்சாலுமூடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா்.

அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, 8 கடைகளுக்கு சீல் வைத்தனா். இந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.