நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லாரி மோதியதில் சேதமடைந்த நிழற்குடை: ஓட்டுநா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே லாரி மோதியதில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது தொடா்பாக, அந்த லாரியின் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 9:26 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே லாரி மோதியதில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது தொடா்பாக, அந்த லாரியின் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

களியல் சந்திப்பு அருகே உள்ள அந்த நிழற்குடையானது, கடந்த சில நாள்களுக்கு முன் லாரி மோதியதில் சேதமடைந்தது. இதையடுத்து லாரியை சற்று தூரம் சென்று நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநா் தப்பிவிட்டாா். இதையடுத்து அந்த லாரியை களியல் பேரூராட்சி நிா்வாகத்தினா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநா் கிருஷ்ணகுமாரை (48) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.