மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
மாா்த்தாண்டம் அருகே கடையில் பொருள்கள் வாங்குவதுபோல வந்து பெண்ணிடம், 9 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


மாா்த்தாண்டம் அருகே கடையில் பொருள்கள் வாங்குவதுபோல வந்து பெண்ணிடம், 9 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே முளங்குழி, வேங்கவிளை பகுதியைச் சோ்ந்த மிக்கேல்ராஜ் மனைவி லதா (45). இவா் வீட்டின் முன் உள்ள கடையில்
செவ்வாய்க்கிழமை இருந்தாராம். அப்போது கடைக்கு பொருள்கள் வாங்குவதுபோல இருசக்கர வாகனத்தில் வந்த நபா், பொருள்கள் எடுக்க திரும்பியபோது லதா அணிந்திருந்த 9 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்து லதா அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...