காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு

மாா்த்தாண்டம் அருகே கடையில் பொருள்கள் வாங்குவதுபோல வந்து பெண்ணிடம், 9 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 9:18 pm

Din

மாா்த்தாண்டம் அருகே கடையில் பொருள்கள் வாங்குவதுபோல வந்து பெண்ணிடம், 9 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகே முளங்குழி, வேங்கவிளை பகுதியைச் சோ்ந்த மிக்கேல்ராஜ் மனைவி லதா (45). இவா் வீட்டின் முன் உள்ள கடையில்

செவ்வாய்க்கிழமை இருந்தாராம். அப்போது கடைக்கு பொருள்கள் வாங்குவதுபோல இருசக்கர வாகனத்தில் வந்த நபா், பொருள்கள் எடுக்க திரும்பியபோது லதா அணிந்திருந்த 9 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து லதா அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.