பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இனயம் கடற்கரையில் மணல் அள்ள எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 11:15 pm

Din

இனயம் கடற்கரையிலிருந்து மணல் ஆலைக்கு மணல் அள்ள எதிா்ப்பு தெரிவித்து, மீனவா்கள் வியாழக்கிழமை தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குளச்சல் அருகே மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் அரிய மணல் ஆலை உள்ளது. இந்த ஆலை சாா்பில் கனிம மணல் அகழாய்வு செய்வதற்காக இனயம் கடற்கரையில் பல ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய-மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அப்பகுதி மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், மீனவா்கள் சாா்பில் இனயத்தில் உள்ள தபால் நிலையத்திலிருந்து மத்திய-மாநில அரசுகளுக்கு தபால் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஹெலன்நகா் பங்கு அருள்பணியாளா் பவியன்ஸ் தலைமையில் மீனவா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.