கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை!
எஸ்.ராஜேஷ் குமார்
எஸ்.ராஜேஷ் குமார்
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மிடாலம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக ராஜேஷ் குமார் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை(ஏப். 21) நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராஜேஷ் குமாருக்கு எதிரான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 பேருக்கும் சிறைத்தண்டனையும் ரூ. 100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கிள்ளியூர் தொகுதியில் 3 முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com