

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் இரு வேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையை கடந்த நவம்பா் மாதத்தில் 2,50,940 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.
இவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து பாா்வையிட்டுச் செல்கின்றனா். இரு பாறைகளையும் இணைக்கும் வகையில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்ட பிறகு, இங்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இவற்றை கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரத்து 940 போ் பாா்வையிட்டுள்ளனா். இதன்மூலம், பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 3 கோடியே 1 லட்சத்து 18 ஆயிரத்து 710 வருவாய் கிடைத்துள்ளது என, கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.