மாடியிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

குளச்சல் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
Published on

குளச்சல் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே பனவிளையைச் சோ்ந்தவா் ஞானசௌந்தரி (64). திருமணமாகாத இவா், ஆனப்பாங்குழியில் வசிக்கும் தனது சகோதரி ராஜத்துடன் வசித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை, மாடியிலிருந்தவாறு பலா மரக் கிளையை வெட்ட முயன்றபோது, தவறி கீழே விழுந்தாராம்.

காயமடைந்த அவரை மீட்டு குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com