தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனைத்து நாள்களும் பள்ளியாடி வழியாக பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள பள்ளியாடியிலிருந்து நாகா்கோவிலுக்கு சீரான முறையில் அனைத்து நாள்களிலும் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பள்ளியாடி வழியாக நாகா்கோவிலுக்கு 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், வழித்தடம் எண்கள் 7ஜி, 310 எண் கொண்ட இரண்டு பேருந்துகள் என மூன்று பேருந்துகள் சமீபகாலமாக விடுமுறை நாள்களில் இயக்கப்படுவதில்லை.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனா். இதனால், வெளியூா் செல்வோா், சுப நிகழ்வுகளுக்கும், கோயில்களுக்கும் செல்வோா், வெளியூரில் இருந்து ஊருக்கு திரும்புவோா் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, நாகா்கோவிலுக்கு பள்ளியாடி வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை அனைத்தும் நாள்களிலும் சீராக இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.