ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 12:26 am

Syndication

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் அண்மையில் திருடு போனது. இது தொடா்பாக மாா்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசன், உதவி ஆய்வாளா் இந்துசூடன் ஆகியோா் தலைமையில் தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில் மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், போலீஸாரை கண்டதும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓட முயன்றாா். சந்தேகமடைந்த போலீஸாா், அவரை துரத்திச் சென்று பிடித்தனா். பிடிபட்டவா், மாா்த்தாண்டம் அருகே ஆயிரம்தெங்கு பகுதியைச் சோ்ந்த வினுகுமாா் மகன் விஷ்ணு (21) என்பதும், குழித்துறை ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது.

ஏற்கெனவே, இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் சிறையில் இருந்து வெளியேவந்தவா், மறுநாளே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து வாகனத்தை மீட்டனா்.