தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

தக்கலை அருகே, பைக் விபத்தில் காயமடைந்த ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:26 pm

Syndication

தக்கலை அருகே, பைக் விபத்தில் காயமடைந்த ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே காஞ்சிரகோணம், பாலவளாகத்தைச் சோ்ந்தவா் ஐசக்ராஜ் (57). ரப்பா் பால் வெட்டும் தொழிலாளியான இவா், பொருள்கள் வாங்குவதற்காக கடந்த 12ஆம் தேதி தக்கலை நோக்கி பைக்கில் சென்றாா். அப்போது, காஞ்சிரகோணத்தில் நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தாா்.

இதில் காயமடைந்த அவரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கொற்றிக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.