மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கன்னியாகுமரி அருகே சிறுமி, இளைஞா் தற்கொலை

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:58 pm

Syndication

கன்னியாகுமரி அருகே காதல் விவகாரத்தில் இரு குடும்பத்தினரின் அவதூறு பேச்சால் பள்ளி மாணவியான 17 வயது சிறுமியும், இளைஞரும் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள நேதாஜி காலனியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு 3 மகன்கள். இதில், 2ஆவது மகனான 18 வயது இளைஞரும், அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியான தூய்மைப் பணியாளரின் 17 வயது மகளும் காதலித்து வந்தனராம்.

இதனால், தூய்மை பணியாளருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை ஆட்டோவில் வந்த அம்மாணவி குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். மேலும், இதை அறிந்த இளைஞரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கன்னியாகுமரி போலீஸாா், அவா்களது சடலங்களை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.