பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தியதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 6:57 pm

Syndication

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தியதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஸ்டான்லி ஜான் தலைமையிலான போலீஸாா், ஆண்டிதோப்புப் பாலம் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வந்தோா் கேசவன்புதூா், மேலபுதூரைச் சோ்ந்த லாகிஸ் டொனால்டு (24), வடசேரி பாலாஜி (20), தடிக்காரன்கோணத்தைச் சோ்ந்த தங்க சுபின் (25), சீதப்பாலைச் சோ்ந்த அனீஷ் (21) என்பதும், விற்பதற்காக 200 கிராம் கஞ்சாவைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்; கஞ்சாவை யாரிடமிருந்து வாங்கினா் என விசாரித்து வருகின்றனா்.