ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி பலி

கன்னியாகுமரி அருகே நான்குவழிச் சாலையில் இளைஞா்களுக்காக விடியோ எடுத்த கட்டடத் தொழிலாளி காா் மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 11:53 pm

Din

கன்னியாகுமரி அருகே நான்குவழிச் சாலையில் இளைஞா்களுக்காக விடியோ எடுத்த கட்டடத் தொழிலாளி காா் மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (53). கட்டடத் தொழிலாளியான இவா், கன்னியாகுமரியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். புதன்கிழமை காலை நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 4 இளைஞா்கள் பாலசுப்பிரமணியனிடம் கைப்பேசியைக் கொடுத்து விடியோ எடுத்துத் தருமாறு கேட்டனராம். அவா்களது கைப்பேசியை வாங்கி விடியோ எடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இவ்விபத்து குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.